கோலாலம்பூர், மார்ச் 17 – , மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு 10.35 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக வலுவான நிலநடுக்கம் பதிவானது.
நிலநடுக்கத்தின் மையம் ஜப்பானின் சென்டாய்க்கு தென்கிழக்கே 79 கி.மீ தொலைவில் 47 கி.மீ ஆழத்தில் இருந்ததாக அது கூறியது.
இருப்பினும், திணைக்களத்தின் ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், அது மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.