புத்ராஜெயா, மார்ச் 17 – திங்கட்கிழமை தொடங்கும் 2022/2023 கல்வி அமர்வில் வகுப்பறைகளுக்கு வெளியே விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் சிறந்த சேவை விருது வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் தளர்வு தொடர்பாகக் கோவிட்-19ஐ தடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என்று ராட்ஸி கூறினார்.