ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

கோல சிலாங்கூர், கிள்ளானில் இன்று  இடியுடன் கூடிய அடைமழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

ஷா ஆலம், மார்ச் 22- சிலாங்கூரின் இரு மாவட்டங்களில் இன்று காலை 11.00 மணி வரை இடியுடன் கூடிய  அடைமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
கிள்ளான் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் இந்நிலை நீடிக்கும் என்று அத்துறை தனது டிவிட்டர் பதிவில் கூறியது.

இடியுடன் கூடிய கன மழை ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டராக இருப்பதற்கான சாத்தியம் தென்படும் பட்சத்தில் இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படும் என்று வானிலை ஆய்வுத் துறை கூறியது.

இடியுடன் கூடிய கனமழை தொடர்பான முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும். இத்தகைய எச்சரிக்கை தொடர்பான ஒவ்வொரு வெளியீடும் ஆறு மணி நேரத்திற்கு மேற்போகாத காலக்கட்டத்திற்கு செல்லத்தக்கதாக இருக்கும்.


Pengarang :