ECONOMYHEALTHNATIONAL

35 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மார்ச் 23: நாட்டில் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் நேற்றைய நிலவரப்படி 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 1,272,121 சிறார்கள் அல்லது 35.8 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின் அடிப்படையில், நாட்டில் 12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 45 ஆயிரத்து 415 பேர் அல்லது 91.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 43 ஆயிரத்து 210 பேர் அல்லது 94.6 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸைப் பெற்றுள்ளனர்.

நாட்டில் மொத்தம் 1 கோடியே 55 லட்சத்து 30 ஆயிரத்து 830 பேர் அல்லது 66 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர் மற்றும் 2 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரத்து 101 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

5,645 முதல் டோஸ்கள், 1,357 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 21,375 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 28,377 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, இது தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்பு கீழ்க் கொடுக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தடுப்பூசி எண்ணிக்கை 6 கோடியே 85 லட்சத்து 46 ஆயிரத்து 897 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக நேற்று 73 இறப்புகள் பதிவாகியுள்ளன.


Pengarang :