ANTARABANGSANATIONALSUKANKINI

தேசிய விளையாட்டாளர் விருதளிப்பு- பாராஒலிம்பிக் பிரிவில் எஸ். சுரேஷ் தேர்வு 

கோலாலம்பூர், மார்ச் 23– நேற்று 2019/2020 ஆண்டிற்கான தேசிய நிலையிலான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை மற்றும் பாராஒலிம்பிக் வீரருக்கான விருதளிப்பு இங்குள்ள தலையாய தங்கும் விடுதியில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் உள்ளரங்கு சைக்கிளோட்ட வீரர் டத்தோ முகமது அஜிசுல்ஹஸ்ன் சிறந்த விளையாட்டு வீரராகவும் வூஷூ விளையாட்டாளர் டான் சியோங் மின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் பாராஒலிம்பிக் பிரிவில் எஸ்.சுரேஷ் சிறந்த விளையாட்டாளராக அறிவிக்கப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு அனைத்துலக பொது அம்பு எறிதல் போட்டியில் வெற்றியாளராக வாகை சூடியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த மூன்று வெற்றியாளர்களுக்கும் தலா 20,000 வெள்ளி ரொக்கப் பரிசும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்பட்டது.

இந்த சிறப்புமிக்க நிகழ்வுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா தலைமை தாங்கினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது பைசால் அஸூமு மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Pengarang :