PASIR MAS, 3 Mac — Penduduk Wan Azlina Wan Yusof, 48, giat melakukan kerja-kerja menjemur barang-barang yang dapat diselamatkan dan boleh digunakan semula ketika tinjauan di Lubok Gong, Rantau Panjang hari ini. Cuaca baik sepanjang hari ini menunjukkan jumlah mangsa banjir di Kelantan menurun kepada 6,341 orang daripada 2,095 keluarga setakat 2 petang ini, berbanding 8,107 orang daripada 2,670 keluarga, pagi tadi. –fotoBERNAMA (2022) HAK CIPTA TERPELIHARA
ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் இன்று மதியம் மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், ஏப்.2: மாநிலத்தின் 3 மாவட்டங்களில் இன்று மதியம் 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிள்ளான், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மூன்று பகுதிகள் உள்ளடங்கியதாக இன்று காலை மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) பேஸ்புக் மூலம் தெரிவித்தது

மஞ்சுங், பாகான் டத்தோ மற்றும் ஹிலிர் பேராக் மாவட்டங்களை உள்ளடக்கிய பேராக்கிலும் இதே வானிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

போர்ட் டிக்சன், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் (தங்காக், மூவார், பத்துப் பகாட் மற்றும் பொந்தியன்) ஆகியவை மோசமான வானிலையை அனுபவிக்கும் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகும்.

சபாவில் தவாவ், குனாக், லகாட் டத்து, தெலுபிட், கினாபத்தங்கன், பெலூரன் மற்றும் சண்டகான் ஆகியவை அடங்கும்.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழைப்பொழிவு தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழையின் அறிகுறிகள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் என  எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும்.

 


Pengarang :