ECONOMYPENDIDIKANSELANGOR

பொது முடக்கத்தின் போது இணைய வழிக் கல்வியை அமல்படுத்திய முன்னோடி உயர் கல்விக்கூடம் யுனிசெல் 

கோல சிலாங்கூர், ஏப் 13– சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (யுனிசெல்) நிலையான நிர்வாகத்தை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய மாநில அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.

பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் அந்த உயர் கல்விக்கூடத்தை தொடர்ந்து வழிநடத்துவதற்கு இந்நடவடிக்கை துணை புரிந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இணைய வழிக் கல்வியை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த கல்வி முறையை அமல்படுத்திய முன்னோடி உயர்கல்விக் கூடங்களில் ஒன்றாக யுனிசெல் விளங்குகிறது. இங்கு 1,000 மணி நேரத்திற்கு மேலாக இயங்கலை வாயிலாக பாடங்கள் போதிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்த திட்டத்திற்கு மாணவர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்ததோடு சுமார் 80 விழுக்காட்டு மாணவர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கும் இந்த இணைய வழி கல்வித் திட்டம் பெரிதும் துணை புரிந்தது என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள பெஸ்தாரி ஜெயா யுனிசெல் வளாகத்தில் நேற்று நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுமார் 2,000 யுனிசெல் மாணவர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டு மந்திரி புசாருடன் நோன்பு துறந்தனர்.


Pengarang :