ECONOMYSELANGOR

வெற்றியைத் தக்க வைக்கப் பாடுபடுங்கள்- கோம்பாக் கெஅடிலான் தலைவர்களுக்கு கோரிக்கை

கோம்பாக், ஏப் 18- கோம்பாக் தொகுதி கெஅடிலான் தலைவர்கள் களத்தில் இறங்கி பாடுபட வேண்டும் என்பதோடு மக்களுக்கு உதவுவதற்கான கடப்பாட்டையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மாநில அரசு நிலையிலும் தொகுதி ரீதியாகவும் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக கட்சித் தலைவர்கள் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.

நாம் ஆற்றுகின்ற பணிகளின் மூலம் வெற்றியும் பெற முடியும். அதே சமயம் அதே பணிகள் நம்மை தோல்விக்கும் இட்டுச் செல்லும். அணுக்கமான நட்புறவை வளர்க்கும் அதேவேளையில் மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் நடந்து கொள்ள வேண்டும். எதிர்கால நலன் கருதி நமது போராட்டத்தை தொடர வேண்டும் என்றார் அவர்.

நாம்  அனைவரும் கடுமையாகப் பாடுபட்டால் கோம்பாக் தொகுதியை வெற்றிக்கான முன்னுதாரணமாக நம்மால் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் கெஅடிலான் தலைவர்களுடன் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வில் சுங்கை துவா, கோம்பாக் செத்தியா, உலு கிள்ளான் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 500 கெஅடிலான் கட்சியின் அடிமட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Pengarang :