ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஹரி ராயா பெருநாளுக்கு சிலாங்கூர் ஃபுரூட் வெலி ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 24: சிலாங்கூர் ஃபுரூட் வெலி    (SFV) ஏப்ரல் 30 முதல் ஹரி ராயா பெருநாளுக்காக ஒரு வாரம் மூடப்படும். வேளாண் சுற்றுலா மையம் மே 7 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்தது.

“சிலாங்கூர் ஃபுரூட் வெலி வேளாண் சுற்றுலாவின் முழுப் பகுதியும் செயல்பாடுகளும் ஏப்ரல் 30 (சனிக்கிழமை) முதல் மே 6 (வெள்ளிக்கிழமை) வரை ஹரி ராயா பெருநாளுக்கு தற்காலிகமாக மூடப்படும்.

” சிலாங்கூர் ஃபுரூட் வெலி  மே 7 (சனிக்கிழமை) முதல் வழக்கம் போல் செயல்படத் தொடங்கும்,” என்று அவர் பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் 016-6880792 / 012-3432971 / 012-3445033 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அழைக்கலாம்

சிலாங்கூர் ஃபுரூட் வெலி  கிட்டத்தட்ட 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் பிளிம்பிங், டுரியான், மாம்பழம், கொய்யா, பலாப்பழம், திராட்சை உட்பட 20 வகையான பழங்கள் உள்ளன.

சிலாங்கூர் ஃபுரூட் வெலியில் 3,000 க்கும் மேற்பட்ட கெலுலுட் கூடுகள் உள்ளன, இது தீபகற்ப மலேசியாவில் கெலுலுட் தேனை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.


Pengarang :