கோலாலம்பூர், மே 8- ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் தவ்லாட் தீவுகளில் இன்று காலை 10.29 மணியளவில் ஏற்பட்டது.
அந்த நிலநடுக்கம் தவ்லாட் தீவுகளின் தென்மேற்கே 28 கிலோமீட்டர் தொலைவிலும் 28 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி ஆபத்து ஏற்படவில்லை என்றும் அது தெரிவித்தது.