ECONOMYMEDIA STATEMENT

கெபோங் பாருவில் வெ. 20 லட்சம் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்

கோலாலம்பூர், மே 10 – மத்திய பொது நடவடிக்கைப்  படைப்பிரிவு  (பி.ஜி ஏ.) நேற்று இங்குள்ள கெபோங் பாருவில்  மேற்கொண்ட  நடவடிக்கையில் 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள  8,207 பெட்டி கடத்தப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இக்கடத்தல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 55 வயதான உள்ளூர் ஆடவர் ஒருவரை  தாங்கள் தடுத்து வைத்துள்ளதாக செராஸ்  பி.ஜி.ஏ. மத்திய  பிராந்திய கமாண்டர் எஸ்.ஏ.சி. ஜூல்கிப்ளி ஜோனிட் கூறினார்.

சிகரெட்டுகள் தவிர்த்து கைப்பேசி மற்றும் இஸூசு டி மெக்ஸ் நான்கு சக்கர இயக்க வாகனம் ஆகியவற்றையும் தாங்கள் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

கடத்தப்பட்ட சிகரெட்டுகளை வைக்கும் கிடங்காக வீடமைப்புப் பகுதியிலுள்ள ஒரு  வாடகை வீட்டை அக்கும்பல் பயன்படுத்தியாக  கூறிய அவர்,   நேற்று காலை 11.00 மணியளவில் அந்த வளாகத்தில் இச்சோதனை நடத்தப்பட்டது என்றார்.

கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை போலீஸ் துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்


Pengarang :