ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இலிட் விரைவுச் சாலையில் ஒன்பது வாகனங்கள் விபத்தில், மூவர் காயம்

கோலாலம்பூர், மே 14 – நேற்றிரவு இங்குள்ள சுபாங் அருகே உள்ள வடக்கு – தெற்கு விரைவு நெடுஞ்சாலையின் மத்திய இணைப்பின் (இலிட்  ) கிலோமீட்டர் 9.2 இல் நேற்றிரவு பிரேக் பிரச்சனைக் காரணமாக ரப்பர்பால்  ஏற்றப்பட்ட லாரி ஒன்பது வாகனங்கள் மீது மோதியதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

சிலாங்கூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் துணைத் தலைவர் டிஎஸ்பி அகமது இசுடின் முகமது ஜுஹாரி கூறுகையில், இந்த விபத்து இரவு 11.44 மணியளவில் நிகழ்ந்ததாகவும், காயமடைந்தவர்களில் ஒரு வாகனத்தில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,  மற்றொன்று ஒரு குடும்பத்தை சேர்ந்து  பெண் மற்றும் ஐந்து வயது சிறுமி மற்றும் 10 வயது உள்ளூர் சிறுவன் இருந்தனர்.

விபத்தில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் பயணித்த பெரோடுவா ஆக்ஸியா கார் மற்றும் ஏழு வங்காளதேச பிரஜைகளை ஏற்றிச் சென்ற நிசான் கிராண்ட் லிவினா பல்நோக்கு வாகனம் (MPV) ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டன.

பேராக், ஸ்லிம் ரிவரிலிருத்து  நெகிரி செம்பிலான்  தம்பினுக்கு சென்று கொண்டிருந்த லாரி, நடு மற்றும் வலது பாதையில் நின்ற ஒன்பது வாகனங்கள் மீது மோதியது.  அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தலை மற்றும் தொடையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் அவர்கள் சிகிச்சைக்காக புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சுபாங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையால் மீட்கப்பட்டனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 42ன் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில், 54 வயதான லாரி ஓட்டுநர் போலீஸாருக்கு உதவுகிறார் என்று அகமது இசுடின் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், விபத்து பற்றிய அழைப்பு கிடைத்தவுடன் சுபாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தீயணைப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.


Pengarang :