ECONOMYEVENTSELANGOR

கோம்பாக்கில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் உபசரிப்பில் 1,500 பேர் பங்கேற்றனர்

கோம்பாக், மே 17– கோம்பாக்கில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர்  மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தாமான் மெலாவத்தி  ரமலான் சந்தை வளாகத்தில் இரவு 8.00 மணிக்குத் தொடங்கிய இந்த உபசரிப்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டிமானா முகமது ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம், கோம்பாக் மாவட்ட அதிகாரி ரோராஸ்லினா அப்துல் அஜிஸ், மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் ஆகியோர் மந்திரி புசார் தம்பதியரை வரவேற்றனர்.

இந்நிகழ்வில் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் தலைமை செயல் முறை அதிகாரி நோரித்தா முகமது சீடேக், செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் முகமது யாஸிட் சைரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த பொது உபசரிப்பில் கலந்து கொண்ட சிறார்களுக்கு மந்திரி புசார் பண அன்பளிப்புகளை வழங்கினார்.


Pengarang :