ஷா ஆலம், 17 மே: ஒன்பது மாவட்டங்களில் நடந்துவரும் சிலாங்கூர் மாநில அரசின் ஹரி ராயா பெருநாள் திறந்த இல்லம் இன்று பண்டார் பாரு பாங்கி சமூக வணிகத் தளத்தில் (தெனெரா ஹோட்டலுக்கு முன்னால்) நடைபெறும்.
இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் டூயட் ராயா வழங்குதலுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
கோவிட் -19 காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்ட இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களைக் கவரும் வகையில் மே 15 முதல் 21 வரை மாநிலம் முழுவதற்கும் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.