ஷா ஆலம், மே 22- நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்றிரிவு இங்குள்ள லாமான் புடாயாவில் நடைபெறும் இசை நீரூற்று நிகழ்வில் கலந்து கொள்ளும்படி பொது மக்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் கேட்டுக் கொள்கிறது.
நோன்ப் பெருநாளை முன்னிட்டு கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு இரவு 9.00 மணி முதல் 9.30 மணி வரை மற்றும் இரவு 9.45 மணி முதல் 10.45 மணி வரை என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.
தாமான் தாசேக் ஷா ஆலமின் புதிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக இந்த இசை நீரூற்று கடந்தாண்டு முதல் விளங்கி வருகிறது.
இந்த இசை நீரூற்று நிகழ்வில் எல்.இ.டி. விளக்கின் ஜாலத்திற்கேற்ப நீரூற்று 40 அடி வரை எழும்பி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.