ECONOMYMEDIA STATEMENT

வீட்டில் வயதான பெண், மகன் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

கோலாலம்பூர், மே 23: ராவாங்கில் உள்ள கம்போங் பாரு குண்டாங்கில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை ஒரு தாயும் அவரது மகனும் இறந்து கிடந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காலை 10.17 மணிக்கு அவர்கள் வீட்டில் 71 வயதான பெண் மயக்கமடைந்த நிலையிலும், 35 வயதுடைய ஆடவர் சடலமாக மீட்கப்பட்டதாக கோம்பாக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜைனல் முகமது முகமது ஒரு அறிக்கையில் கூறினார்.

“சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை. அவர்கள் இருவரிடமும் இருந்த பணம், மொபைல் போன்கள் போன்ற பொருட்கள் சம்பவ இடத்தில் இருந்தன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டன. முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை இந்த வழக்கு திடீர் மரண வழக்கு (எஸ்டிஆர்) என பட்டியலிடப்பட்டுள்ளது, ”என்று அவர் கூறினார்.

மேலும் ஏதேனும் விவரங்களுக்கு குண்டாங் காவல் நிலைய தலைமை சார்ஜென்ட் மேஜர் வான் அசார் வான் அரிபினை 03-60341222 அல்லது 019-9997233 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்


Pengarang :