ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

தீயணைப்புத் துறையின்  பயிற்சியில் பத்து பெண்கள் உள்பட 100 தன்னார்வலர்கள் பங்கேற்பு

ஷா ஆலம், மே 29- சிலாங்கூரில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கையில் பங்கேற்பதற்காக உருவாக்கப்பட்ட செர்வ் இலிட் குழுவில் இடம் பெறக்கூடிய சிலாங்கூர் தன்னார்வலர் (செர்வ்) அமைப்பின் 100 உறுப்பினர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செர்வ் உறுப்பினர்கள் 300 பேரிடம் சிலாங்கூர் விளையாட்டு மன்றம் நடத்திய  சோதனையில் செர்வ் இலிட் குழுவில் இடம் பெறுவதற்கு தகுதியான 100 பேர் அடையாளம் காணப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் அகமது டேனிஸ் ஹைருடின் கூறினார்.

செர்வ் அமைப்பில் 3,800 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 300 பேர் நல்ல திடகாத்திரமும்  வெள்ளம் போன்ற பேரிடர்களில் மீட்புப் பணியை மேற்கொள்வதற்குரிய ஈடுபாட்டையும் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

அந்த 300 பேரிடம்  எம்.எஸ்.என். எனப்படும் சிலாங்கூர் விளையாட்டு மன்றம் சோதனை நடத்தியது. அச்சோதனையில் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடக் கூடிய 100 பேர் அடையாளம் காணப்பட்டனர் என்றார் அவர்.

அவர்களில் 10 பேர் பெண்கள் எனக் கூறிய அவர், குறிப்பிட்ட சில சூழல்களில் அவர்களின் சேவை இப்பணியின் போது தேவைப்படுகிறது என்றார்.

பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாக இருந்து அவர்கள்  நிலைகுலைந்து  காணப்படும் பட்சத்தில் அவர்களைத் அரவணைத்து தேற்றக்கூடிய பணியை பெண்களால் மட்டுமே செய்ய முடியும் என்று அவர் சொன்னார்.


Pengarang :