ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோம்பாக் தொகுதி கெஅடிலான் தலைவர் பதவியை அமிருடின் தக்க வைத்துக் கொண்டார்

ஷா ஆலம், மே 29- கோம்பாக் தொகுதி கெஅடிலான் தலைவர் பதவியை சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தக்க வைத்துக் கொண்டார்.

இத்தொகுதியில் நடைபெற்ற நேரடிப் போட்டியில்  பேராக் மாநிலத்தின் முன்னாள் கெஅடிலான் தலைவர் ஃபார்ஷா வஃபா சால்வடோர் ரிசாலை சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அமிருடின் தோற்கடித்தார்.

இந்த முடிவு 2022 கெஅடிலான் தேர்தல் தொடர்பான அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இதனிடையே, ஷா ஆலம் தொகுதிக்கான கட்சித் தேர்தலில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் யாக்கோப் சபாரியைத் தோற்கடித்தார்.

அம்பாங் தொகுதியில் நடைபெற்ற மும்முனைப் போட்டியில் ரிட்சுவான் பாச்சோக் வெற்றி பெற்ற வேளையில் பண்டான் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இரு வேட்பாளர்களைத் தோற்கடித்து ரபிஸி ரம்லி வெற்றி பெற்றார்.


Pengarang :