ECONOMYEVENTSELANGORSENI

நாளை முதல் சிப்பாங்கில் பாகான் லாலாங்கில் விவசாயப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை

ஷா ஆலம், ஜூன் 3: சிப்பாங் மாவட்ட வேளாண்மைத் துறையானது சிலாங்கூர் அக்ரோ கிரீன் நிகழ்ச்சியை நாளை முதல் திங்கள் வரை மூன்று நாட்களுக்கு டத்தாரான் பந்தாய் பாகான் லாலாங்கில் நடத்துகிறது.

இந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை டிராகன் ஃப்ரூட் அல்லது பித்தாயா வைத்து புதுமையான சமையல் அல்லது உணவு  தயாரிப்பு போட்டியும் நடத்தப்படும்.

“இந்தப் போட்டி இலவசம் மற்றும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய குடிமக்கள் கலந்துக் கொள்ளலாம்.

“டிராகன் பழம் அல்லது பித்தாயாவை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு சமையல் செய்ய வேண்டும், மேலும் பங்கேற்பாளர்களுக்கு அலங்கரித்து பரிமாறுவதற்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர், சுவரொட்டியில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, பதிவு செய்ய நாளை கடைசி நாளாகும்,” என்றார்.

இது தவிர, பொருட்கள் மற்றும் புதிய பழங்கள் விற்பனை தவிர, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களால் கண்காட்சிகள் நடத்தப்படும்.


Pengarang :