கோலாலம்பூர், ஜூன் 10- புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நாளை நடைபெறும் 2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கால்பந்து தேர்வாட்டத்தை முன்னிட்டு அம்பாங் மற்றும் ஸ்ரீ பெட்டாலிங் இடையிலான எல்.ஆர்.டி. எனப்படும் இலகு ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்படவுள்ளது.
இந்த தேர்வாட்டத்தில் மலேசியா பாஹ்ரினை சந்தித்து ஆடவுள்ளது. ரசிகர்களின் வசதிக்காக செந்தூல் தீமோர் செல்லும் கடைசி இரயில் சேவை நேரம் பின்னிரவு 12.03 மணியாகவும் புத்ரா ஹைட்ஸ் செல்லும் இரயில் நேரம் பின்னிரவு 12.44 மணியாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரெப்பிட் ரயில் சென்.பெர்ஹாட் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
ஆட்டம் முடிந்து வீடு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக கூடுதல் இரயில் சேவையும் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்து.