ஷா ஆலம், ஜூன் 13– கடந்த சனிக்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியைக் காண சிலாங்கூர் ராஜா மூடா வருகை புரிந்தார்.
ராஜா மூடா தெங்கு அமீர் ஷா கால்பந்து போட்டியை அரங்கில் கண்டு களித்ததாக சிலாங்கூர் அரச முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் மலேசியா 1-2 என்ற கோல் கணக்கில் பஹ்ரைனிடம் தோல்வி கண்டது.
பிரதமர் டத்தோ’ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ அகமது பைசல் அசுமு ஆகியோரும் இந்த ஆட்டத்தைக் காண வருகை புரிந்தனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 2023 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றின் இ பிரிவு இரண்டாவது ஆட்டத்தில் மலேசியா பஹ்ரைனிடம் தோற்றது.
இந்த தோல்வியால் இரண்டு போட்டிகள் மூலம் அதிகபட்சமாக ஆறு புள்ளிகளை பெற்ற பஹ்ரைனிடம் இ பிரிவுக்கான வெற்றியாளர் அந்தஸ்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் மலேசிய அணிக்கு ஏற்பட்டது.