கோலாலம்பூர், ஜூன் 13– அமெரிக்கா கடற்படை அகாடமியில் (USNA) பட்டம் பெற்ற நாட்டின் முதல் பெண் அதிகாரியான ராயல் மலேசியன் தேவியின் (அரச மலேசிய கடற்படையின் என்னும் ஆர்எம்என்} மூத்த கேடட் அதிகாரி பா. ஜனுஷாவுக்கு பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா வாழ்த்து தெரிவித்தார்.
சிறப்பான சாதனை, ஜனுஷாவை மற்றும் ராயல் மலேசியன் கடற்படையின் (RMN) பிற பணியாளர்களைத் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், இராணுவத் துறையில் வெற்றியை அடையவும் ஊக்குவிக்கும் என்று நம்புவதாகக் பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா இஸ்தானா நெகாராவின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
பகாங்கில் உள்ள கோலா லிபிஸ் நகரைச் சேர்ந்த 23 வயதான ஜனுஷா, அமெரிக்காவின் புகழ்பெற்ற இராணுவ அகாடமியில் அனுமதிக்கப்பட்ட முதல் மலேசியப் பெண் என்ற வரலாற்றைப் படைத்தார்.
அவர் 2018 இல் USNA இல் தனது நான்கு ஆண்டு காலப் பணியை அமெரிக்காவிலிருந்து 1,085 பயிற்சியாளர்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் இருந்து தொடங்கினார்.
இந்த பாஸ்சிங் அவுட் அணிவகுப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமை தாங்கினார் மற்றும் அமெரிக்க கடற்படையின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கலந்து கொண்டனர்.