ECONOMYMEDIA STATEMENT

காராக் நெடுஞ்சாலையில் உமிழ்நீர் துப்பியதற்காக, ஓட்டுநருக்கு RM400 அபராதம்

கோலாலம்பூர், ஜூன் 22 – காராக் நெடுஞ்சாலையில் தனது தோயோத்தா அல்பர்ட் காரை ஓட்டிச் செல்லும் போது ஜன்னலுக்கு வெளியே எச்சில் துப்பியதற்காக, பேஸ்புக்கில் வைரலாகப் பரவிய நபருக்கு அதிகபட்சமாக RM400 அபராதம் விதித்தது, அபராதம் செலுத்த தவறினால் ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட, உணவக நடத்துனர் லிம் கோ சிங், 44, இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி பிற்பகல் 3.47 மணிக்கு பெந்தோங்கை நோக்கிச் செல்லும் போது குற்றத்தைச் செய்ததாக மாஜிஸ்திரேட் நூர் ஹபிசா ரஜூனிர் முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தண்டனைச் சட்டத்தின் 268வது பிரிவின் கீழ், பொதுத் தொல்லை விளைவித்தாக குற்றம் சாட்டப்பட்டது, பிரிவு 290 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும், அதிகபட்சமாக RM400 அபராதம் விதிக்கப்படும். எனவே லிம்மிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அவர் செலுத்தினார்.

இருப்பினும், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 42 (1) இன் கீழ் அதே   இடத்தில்,  அதே தேதி மற்றும் நேரத்தில் கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டிய மற்றுமொரு குற்றச்சாட்டையும்,  ஆபத்து அவசர பாதையில்  வாகனத்தை செலுத்தியதையும் அவர் மறுத்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், லிம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் RM5,000 க்கு குறையாத அபராதம் மற்றும் RM15,000 க்கு மிகாமல் தண்டனையை எதிர்கொள்கிறார், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத ஓட்டுநர் உரிமத்தையும் இழக்க நேரிடும்.

ஆனால்  அரசு துணை வழக்கறிஞர் அனிஸ் ஃபர்ஹா அப்துல் ஹில்மி இரண்டு குற்றங்களுக்கும் RM7,000 ஜாமீன் வழங்க முன்மொழிந்தார், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் தனது குடும்பத்தை ஆதரிப்பதால் குறைந்த தொகைக்கு மனு செய்தார்.

நீதிமன்றம் அவருக்கு ஒரு ஜாமீனுடன் RM5,000 ஜாமீன் வழங்கியது மற்றும் வழக்கு  விசாரணைக்கு செப்டம்பர் 5 ஆம் தேதியை ஒதுக்கியது.


Pengarang :