ECONOMYMEDIA STATEMENT

படிவம் 4 மாணவி காதலனால் படுகொலை செய்யப்பட்டார்

கிள்ளான், ஜூன் 28 – இங்கு அருகே உள்ள பாண்டமாரான், கம்போங் இடமானில் உள்ள ஆணின் வீட்டில் நேற்று, 16 வயது சிறுமி, காதலனால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

அதிகாலை 3.40 மணியளவில் வீட்டின் முன் முற்றத்தில் ஒரு இளம்பெண் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டு போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக தென் கிள்ளான் காவல்துறைத் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

“நேற்று அதிகாலை 2 மணியளவில், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை தனது அறைக்கு அழைத்து வந்தார். அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமே அவர் மரணத்திற்குக் காரணமானதாகக் கூறப்படுகிறது.

“பின்னர் அவர் காவல்துறையை அழைத்த அவரது குடும்ப உறுப்பினர்களிடம் உதவி கோரினார். பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி அறிவித்தார், ”என்று அவர் இன்று தென் கிள்ளான் போலிஸ் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பூச்சோங்கில் தனது மாமாவுடன் வசித்து வந்த சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு வருடமாக ஒருவரையொருவர் அறிந்திருப்பதாகவும், அவர்களது உறவை அவர்களது குடும்பத்தினர் அறிந்திருந்தார்கள் என்றும் சா கூறினார்.

“பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறலால் இறந்ததாகக் தெரிய வந்துள்ளது,” என்று அவர் கூறினார், மேலும் பாதிக்கப்பட்டவரின் முகம் மற்றும் கழுத்தில் கீறல்கள் மற்றும் காயங்கள் காணப்பட்டன.

குற்றவியல் பதிவுகள் இல்லாத 24 வயதான சந்தேக நபர், குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைகளை எளிதாக்குவதற்காக ஜூலை 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


Pengarang :