ANTARABANGSAECONOMYSUKANKINI

ஏ.எஃப்.எஃப். கிண்ண கால்பந்தாட்டம்- கம்போடியாவை வீழ்த்த ஹரிமாவ் மலாயா கங்கணம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5- ஜாகர்த்தா மாட்யா அரங்கில் இன்று மாலை நடைபெறும் 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான 2022 ஏ.எஃப்.எஃப். கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கம்போடியாவை வென்று மூன்று புள்ளிகளை முழுமையாகப் பெற ஹரிமாவ் மலாயா குழு கங்கணம் கட்டியுள்ளது.

கம்போடியா குழு நேற்றைய ஆட்டத்தில் சிங்கப்பூரை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ள வேளையில் அக்குழுவை எதிர் கொள்வதில் ஹரிமாவ் மலாயா அணி மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கம்போடியாவின் ஆட்ட பாணியை அறிந்து கொண்டது எதிரணிக்கு சாதகமானதாக இருக்கும் என ஹரிமாவ் மலாயா அணியின் பயிற்றுநர் ஹசான்  சசாலி கணித்துள்ள வேளையில் மிகவும் கவனமுடன் ஆடும்படி தனது விளையாட்டாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

கம்போடிய குழுவுக்கு இது இரண்டாவது ஆட்டமாகும். மலேசியாவைப் பொறுத்த வரை முதன் முறையாக களம் காண்கிறது. விளையாட்டாளர்கள் மனோரீதியாக உற்சாகம் பெற இவ்வாட்டத்தில் வெற்றி நமக்கு அவசியம் தேவைப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :