ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பாலிங் வெள்ளம்- உதவிக் குழுவை சிலாங்கூர் அனுப்பியது 

ஷா ஆலம், ஜூலை 6– வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் தன்னார்வலர் உதவிக் குழுவை மாநில அரசு கெடா மாநிலத்தின் பாலிங் நகருக்கு அனுப்பியது.

இங்குள்ள அரசு தலைமைச் செயலகத்தில் அந்த உதவிக் குழுவின் வாகன அணியை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழியனுப்பி வைத்தார்.

சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் செயலாளர் தலைமையிலான அந்த சிலாங்கூர் பரிவு மீட்புக் குழுவில் ஊராட்சி மன்றங்களைச் சேர்ந்த 189 அதிகாரிகளும் செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பை பிரதிநிதித்து 20 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வாகன அணியில் நான்கு சக்கர இயக்க வாகனங்கள், குப்பை அகற்றும் லோரிகள், 33 இயந்திரங்கள் மற்றும் 112 உபகரணங்கள் ஆகியவையும் அடங்கியுள்ளன.

நமது இந்த உதவி  கெடாவில் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைப்பதில் ஓரளவு உதவும் என்பதோடு பல்வேறு சவால்களை எதிர்கொண்ட மாநில அரசின் தயார் நிலையையும் புலப்படுத்தும் வகையில் உள்ளது என அமிருடின் சொன்னார்.

சிலாங்கூரிலும் எதிர்காலத்தில் நிகழ்வதற்கு சாத்தியம் உள்ள பேரிடர்களுக்கு தயாராவதற்கான களப்பயிற்சியாக இந்த உதவிப் பணியை நாங்கள் கருதுகிறோம். இது போன்ற சூழ்நிலையை கடந்தாண்டு இறுதியில் நாம் எதிர்நோக்கியிருந்தோம் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில மீட்புக் குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை வரை அம்மாநிலத்தில் தங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாஜ்ஜூப் பெருநாளுக்கு ஒருநாள் முன்பு வரை அந்த உதவிப் பணிகள் தொடர்வதற்கான சாத்தியமும் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :