ஈப்போ, ஜூலை 7- இங்குள்ள தாமான் பெர்ச்சாம் அமானில் வீடொன்றில் கணவன்-மனைவி இருவரும் இன்று காலை படுகொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத் தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள் அவ்வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திலிருந்து குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதையும் காண முடிந்தது. மாநில குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ அனுவார் ஓத்மானும் சம்பவ இடத்தில் காணப்பட்டார்.