ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் கடின உழைப்புமே, கட்சி புத்ராஜெயாவை அடைய எளிதான பாதை

ஷா ஆலம், ஜூலை 17: அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சியை பலப்படுத்த, புதிய தலைமைக்கு முழு நம்பிக்கையை அளித்து, காங்கிரஸ் முடிந்ததும் ஒரு குழுவாகச் செயல்படுமாறு கெஅடிலன் ராக்யாட்  உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்த படுகிறார்கள்.

அனைத்து மட்டங்களிலும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் கடின உழைப்பும் கட்சிக்கு புத்ராஜெயாவை அடைய எளிதான பாதையைத் திறக்கும் என்று தகவல் தொடர்பு இயக்குனர் நம்பிக்கை தெரிவித்தார்.

“கட்சி அப்படியே மற்றும் வலுவாக இருப்பதை உறுதி செய்ய, புதிய தலைமையின் மீது முழு நம்பிக்கையை நாம் ஒன்றாக வைக்க வேண்டும்.

“அன்வார் இப்ராஹிம் மற்றும் ரஃபிஸி ரம்லியின் தலைமைத்துவம்  பற்றி அவர்கள் (எதிரி கட்சிகள்) கவலைப் படுகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம், இதுவே கெஅடிலானை வழிநடத்த, புத்ராஜெயாவை அடைய வலிமையான சக்தியாகும், என்று அவர் பிரதிநிதிகளின் ஆரவாரத்துடன் கூறினார்.

இன்று 16வது  தேசிய காங்கிரஸின் மேடையில் பேசிய லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், சில தரப்புகள் எதிரிக்கு கழுத்தை கொடுக்க தயாராக இருப்பதால் தான் வருத்தமடைந்ததாக ஒப்புக்கொண்டார், இதனால் கட்சிக்கு பெரிய தாக்கம் ஏற்படும்..

எனவே, உட்கட்சி விவாதங்களை வெளிப்படுத்தும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று சபை உள்ளிட்ட புதிய தலைமைத்துவம் மேலும் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

“சம்பந்தப்பட்டவர்கள் வேண்டுமென்றே கட்சியைத் தாக்க அனுமதிக்கிறார்கள்,  அவதூறு பரப்புகிறார்கள்.  அப்படிப்பட்ட தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

‘உயர்ந்து வரும் நீதி’ என்ற கருப்பொருளில், வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்ற மூன்று நாள் மாநாடு இன்று மாலை நிறைவடைகிறது. கடந்த ஆண்டு கோவிட்-19 பரவல் காரணமாக 2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள முடியாமல் போனதை அடுத்து இவ்வாண்டு காங்கிரஸ் நடைபெற்றது.


Pengarang :