கோலாலம்பூர், ஜூலை 20 – இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று காலை 7.46 மணியளவில் மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது பெங்குலுவில் இருந்து தெற்கே 62 கிமீ தொலைவில் 63 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.