ECONOMYMEDIA STATEMENT

கிராக்ஹவுஸ் காமெடி கிளப்பின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

கோலாலம்பூர், ஜூலை 21: இங்குள்ள தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள
கிராக்ஹவுஸ் காமெடி கிளப் உரிமையாளர்க்கு, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வந்த மிரட்டல்கள் குறித்து புகார் வந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருதீன் அப்துல்
ஹமீத் கூறுகையில், நேற்றைய தினம் கிராக்ஹவுஸ் காமெடி உரிமையாளரால் புகார்
செய்யப்பட்டதாகவும், நேற்றைய தினத்தில் கிராக்ஹவுஸ் காமெடி கிளப்பில் சாயம் வீசும்
சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 507 மற்றும் சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14
ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.


Pengarang :