ALAM SEKITAR & CUACAECONOMY

இரண்டு ஆறு மாசுபடுதல்களை லுவாஸ் விரைவாகக் கையாண்டதால், நீர் இடர்பாடுகள்  தவிர்க்கப்பட்டது.

ஷா ஆலம், ஜூலை 23: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் (LRA) பணியை நிறுத்த அபாயகரமான பொறுப்பற்ற தரப்பினரின் நடவடிக்கை கண்டறிந்து,  தக்க நடவடிக்கை எடுத்ததால் இந்த வாரம் ஆற்று நீரின் மாசுபடுதல் சம்பவங்கள்  இரண்டை சமாளிக்க முடிந்தது.

24 மணி நேர கண்காணிப்பு மூலம், இன்று சுங்கை காபூல், உலு லங்காட்டில் 2 டன் (துர்நாற்றத்தின் அளவு) சாயம் போன்ற வாசனை மாசுபாட்டையும், ஜூலை 19 அன்று உலு லங்காட்டின் சுங்கை லங்காட்டில் எண்ணெய் போன்ற கறையையும் நிறுவனம் கண்டறிந்தது.

இருப்பினும், பல தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு, இரண்டு சம்பவங்களும் உடனடியாக கையாளப்பட்டன.

“லுவாஸ் இந்த இரண்டு சம்பவங்களின் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து, நீர் ஆதாரங்களின் தொடர்ச்சி எப்போதும் பாதுகாக்கப்படுவது உறுதி செய்வதற்காக 24 மணி நேர கண்காணிப்பைத் தொடர்கிறது,” என்று அவர் இன்று பேஸ்புக்கில் தெரிவித்தார்.

“மாநிலத்தின் ஆறுகள் மாசுபடுவதற்கு பங்களிக்கும் திறன் கொண்ட செயல்பாடுகள் குறித்து அனைத்து தரப்பினரும் அக்கறை கொள்ளுமாறு லுவாஸ் அழைப்பு விடுக்கிறது.”


Pengarang :