MEDIA STATEMENTNATIONALSUKANKINI

எஃப்.ஏ. கிண்ணம்- சபாவை 2-0 கோல் கணக்கில் வீழத்தி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது சிலாங்கூர்

ஷா ஆலம், ஜூலை 24- கோத்தா கினபாலு, லிக்காஸ் அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற எஃப்.ஏ. கிண்ண  காலிறுதிப் போட்டியில் உபசரணை மாநிலமான சபாவை 2-0 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் வீழ்த்தியது.

இதன் வழி அந்த போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு நுழையும் தகுதியை  சிலாங்கூர் எஃ.ப்.சி. குழு பெற்றுள்ளது.

பயிற்றுநர் மைக்கல் ஃபெய்டென்பெய்னர் தலைமையிலான சிலாங்கூர் அணி தனது முதல் கோலை ஆட்டத்தின் தொடக்கத்தில் இறக்குமதி ஆட்டக்காரர் யுரி ஹென்ரிக் மூலம் போட்டது.

ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் ஹெர்லிசன் கெய்யோன் புகுத்திய இரண்டாவது கோலின் மூலம் சிலாங்கூர் தனது வெற்றி வாய்ப்பை வலுப்படுத்திக் கொண்டது.


Pengarang :