ஷா ஆலம், ஆக 1- கூகுள் மலேசியா ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய 30 பேர் நேற்று பந்திங் கெலனாங் கடற்கரையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த துப்புரவு இயக்கத்தின் போது காலி போத்தல்கள், பிளாஸ்டிக், துணிகள் உள்ளிட்ட 137 கிலோகிராம் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக கோல லங்காட் நகராண்மைக் கழகம் அறிவித்தது.
கூகுள் மலேசியா ஊழியர்களும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் இந்த துப்புரவு இயக்கத்தில் பங்கேற்றனர்.
இத்திட்டத்தில் பங்கேற்ற கூகுள் மலேசியாவிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்று நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் கூறியது.