ECONOMYMEDIA STATEMENTSELANGOR

தூய்மையின்மை காரணமாக உணவகத்தை மூட பெ.ஜெயா மாநகர் மன்றம் உத்தரவு

ஷா ஆலம், ஆக 10- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் இன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுத்தத்தை முறையாகப் பேணாத உணவகம் ஒன்றை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.

ஆரா டாமன்சாரா, பி.ஜே.யு.1ஏ/4 பகுதியிலுள்ள அந்த உணவகம் தூய்மையின்மையின்றி காணப்பட்டதோடு உணவுப் பாத்திரங்களும் தரையில் வைக்கப்பட்டிருந்தது இச்சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த உணவகத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணைய் கால்வாயில் கலப்பதைத் தடுக்கும் வடிதட்டு அமைக்கப்படாததோடு பூச்சிகளின் நடமாட்டத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இக்குற்றங்களுக்காக அந்த உணவகத்தை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பணியாளர்கள், தொப்பி, காலணி மற்றும் ஏப்ரன் அணியாதது தொடர்பில் அபராதமும் விதிக்கப்பட்டது என் அந்த தெரிவித்தது.

அசுத்தமான உணவகங்கள் குறித்த தகவல்களை 03-79542020 என்ற ஹாட்லைன் எண்களில் அல்லது மாநகர் மன்றத்தின் பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக புகார் அளிக்கலாம் என்றும் மாநகர் மன்றம் குறிப்பிட்டது.


Pengarang :