ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சுங்கை பாத்தாங் காலி ஆற்று நீரில் கலங்கள்  இல்லை,  நீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) பாத்தாங் காலி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்ஆர்ஏ) நடத்திய ஆய்வில், நதி நீர் நல்ல நிலையில் இருப்பதாகவும், கலங்கள் ஏற்படவில்லை என்றும் கண்டறிந்துள்ளது.

“நீர் எடுக்கும்  முகத்துவாரத்தில் உள்ள ஆற்று நீரின் நிலையை கண்காணிக்க எல்ஆர்ஏ பாத்தாங் காலியில் லுவாஸ் மேற்கொண்ட ஒரு கண்காணிப்பின் வழி நதி நீரின் நிலை சாதாரணமானது மற்றும் கலங்கி காணப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.

லுவாஸ் இன் படி, சுங்கை தாமுவின் மேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஒரு வளாகத்தில் நிலத்தை சுத்தப்படுத்தும் திட்டம் இருப்பதை கண்டறிந்து, அங்குள்ள நீர்ப்பிடிப்பு குளத்திலிருந்து ஒரு கலங்கலான ஓடை வெளியேறுவதைக் கண்டறிந்தது.

இருப்பினும், நிறுவனத்தின் விசாரணையானது சுங்கை பாத்தாங் காலியின் மேல் பகுதியில் சுங்கை கெடோன்டாங் சங்கமிக்கும் வரை தொடர்ந்தது, இரண்டும் நல்ல மற்றும் இயல்பான நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

“சிலாங்கூரின் நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் லுவாஸ்சின் அணுக்கமான கண்காணிப்பு தொடர்கிறது” என்று நிறுவனம் கூறியது.


Pengarang :