ECONOMYNATIONAL

மாநில நிலையில் தேசிய தினக் கொண்டாட்டம்- கோலாகல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

ஷா ஆலம், ஆக 25– நாட்டின் 65வது தேசிய தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்டு 30ஆம் தேதி ஷா ஆலம், டத்தாரான் கெமெர்டேக்காஹான் சதுக்கத்தில் இரவு 8.00 மணி முதல் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வையொட்டி எர்னி ஜக்ரி மற்றும் பிளேக் ஹனிபா இசைக்குழுவினரின் படைப்புகள், அணிவகுப்பு, பல்லின நடனங்கள், ஆயுதமின்றி போர் ஒத்திகை, வாண வெடி போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகஸ்டு 31 ஆம் தேதி தொடக்கி வைப்பார்.

இவ்வாண்டு தேசிய தினத்திற்கு ‘கித்தா சிலாங்கூர் தெகோ பெர்சாமா‘ எனும் கருப்பொருளை தேர்ந்தெடுத்துள்ளது. சவால்களை எதிர்கொள்வதில் மக்களின் சமத்துவம் மற்றும் தைரியம் என்பது இதன் பொருளாகும்.


Pengarang :