ECONOMYMEDIA STATEMENT

கட்டுப்பாட்டை இழந்த கார் கடலில் பாய்ந்தது- ஒருவர் மரணம், நால்வர் காயம்

கங்கார், ஆக 26- ஐவர் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து கடலில் பாய்ந்ததில் 25 வயது ஆடவர் பலியானதோடு அக்காரில் பயணித்த இதர நால்வர் லேசான காயங்களுக்குள்ளாயினர்.

இச்சம்பவம் ஜாலான் பெர்சிசிரான் பந்தாய் கோல பெர்லிஸ்- சுங்கை பாரு சாலையில் நேற்றிரவு 11.00 மணியளவில் நிகழ்ந்தது.

சுங்கை பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறம் திரும்பி கடலில் பாய்ந்தாக பெர்லிஸ் மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுரினா சஹாட் கூறினார்.

இச்சம்பவத்தில் காரின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த அகமது பைஹாக்கி முகமது ஷாபி காரிலிருந்து வீசியெறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

உயிரிழந்த ஆடவரின் உடல் பரிசோதனைக்காக கங்கார், துவாங்க பவுசியா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் காயங்களுக்குள்ளான 17 முதல் 24 வயது வலையிலான இதர நான்கு பேருக்கும் வெளிநோயாளிகளாக சிகிச்சையளிக்கப்பட்டனர் என்றார் அவர்.

இவ்விபத்து ஏற்பட்ட போது அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த தாக கூறிய அவர், சாலையில் பிரேக் வைத்ததற்கான அடையாளம் ஏதும் காணப்படவில்லை என்றார்.


Pengarang :