ECONOMYMEDIA STATEMENT

உணவகத்திலன் முன் தொப்புள் கொடியுடன் ஆடையின்றி குழந்தை கண்டெடுப்பு

ஷா ஆலம், செப் 3: சபாவின் லகாட் டத்து கிராமத்தில் உள்ள உணவகத்தில் நேற்று காலை தொப்புள் கொடியுடன் இருந்த ஆண் குழந்தை ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டது.

காலை 7 மணியளவில் தனது தொழிலைத் தொடங்கவிருந்தபோது, புதிதாகப் பிறந்த குழந்தையை கடையின் உரிமையாளரால் கண்டுபிடித்ததாக லகாட் டத்து மாவட்ட காவல்துறைத் தலைவர் கூறியதாக, ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.

“குழந்தை 2.9 கிலோகிராம் எடையுடன் பிறந்ததாக நம்பப்படுகிறது, மேலும் ஆடைகள் எதுவும் இல்லாமல் உணவுக் கடையில் கண்டுபிடிக்கப்பட்டது.

“சம்பந்தப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் லகாட் டத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது” என்று உதவி ஆணையர் ரோஹன் ஷா அகமது கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 317வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும், இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் ஐபிடி லகாட் டத்து ஹாட்லைனை 089-881255 என்ற எண்ணில் அல்லது இன்ஸ்பெக்டர் மர்லிசா மேடிகா@ மர்டேகா என்ற 016-2194554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.


Pengarang :