ECONOMYMEDIA STATEMENT

முன்னாள் செய்தி வாசிப்பாளர் வீட்டில் புக்கிட் அமான் தடயவியல் பிரிவு சோதனை

ஷா ஆலம், செப் 7 – கடந்த ஆண்டு முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் முன்னாள் டிவி3 செய்தி வாசிப்பாளர் ஜலினா ஷஹாரா அஸ்மானின் வீட்டில் புக்கிட் அமானின் தடயவியல் குழு நேற்று சோதனை நடத்தியது.

இந்த வழக்கு விசாரணையில் எந்த ஆதாரமும் கிடைக்காததால்
புதிய ஆதாரங்களைக் கண்டறிய உதவும் வகையில் இன்று நேற்று 10 00 மணியளவில் அவ்வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இக்பால் இப்ராஹிம் ஓர் அறிக்கையில் கூறினார்.

ஜலினா காணாமல் போனது தொடர்பில் அவரின் மகன் மைக்கேல் நார்மன் (வயது 33) என்பவரிடமிருந்து கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி  போலீஸாருக்கு புகார் வந்தது.

தன் தாத்தா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளத் தகவலை  ஜலினாவிடம் தெரிவிப்பதற்காக அவரது மகன் கடந்த நவம்பர் 24 முதல் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். எனினும், அவரது முயற்சி பலனளிக்கவில்லை.

ஜலினா வெளிநாட்டிற்கு சென்றதற்கான எந்த ஆதாரமும் கிடைக்காததால் அவர் இன்னும் நாட்டில்தான் இருப்பதாக போலீசார் நம்புகிறார்கள்.


Pengarang :