ECONOMYSELANGOR

கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக ஏற்பாட்டில் பூனை தத்தெடுப்புத் திட்டம்

ஷா ஆலம், செப் 14– பூனை தத்தெடுப்புத் திட்டத்தை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலத்திற்கு கோல சிலாங்கூர் காம்ப்ளெக்சில் உள்ள எம்.பி.கே எஸ். வளர்ப்பு பிராணிகள் தற்காலிக பராமரிப்பு மையத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படும்.

இந்த தத்தெடுப்பு நிகழ்வு ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் என்று அந்த நகராண்மைக் கழகம் கூறியது ஆர்வமுள்ள பொது மக்கள் 30 வெள்ளி கட்டணத்தில் பூனைகளை தத்தெடுக்கலாம்.

அவர்கள் சொந்தமாக கூண்டுகளை கொண்டு வர வேண்டும். இந்த பூனை தத்தெடுப்புத் திட்டம் தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர்  017-628 7542 என்ற எண்களில் நகராண்மைக் கழகத்தை தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :