ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வாக்களிக்க செல்ல வேண்டாம் என வைரலான செய்தி, போலியானது மக்களை குழப்பும் முயற்சி

ஷா ஆலாம், அக் 15: சிலாங்கூர் மக்கள் குறிப்பிட்ட தேதியில் வாக்களிக்க வேண்டாம் என்று தான் கேட்டுக் கொண்டதாக வைரலான செய்தி தவறானது என்பதை டத்தோ மந்திரி புசார் நேற்று உறுதிப் படுத்தினார்.

“சிலாங்கூர் மக்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நான் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் பரவியுள்ளன. இந்தக் கூற்று பொய்யானது.

“அந்த நடவடிக்கை சிலாங்கூர் மக்களை தவறாக வழிநடத்த விரும்புபவர்களின் தீய விளையாட்டு” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

நேற்று இஸ்தானா புக்கிட் கயாங்கனில் சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் உடனான சந்திப்புக்கு பிறகு மாநிலத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த துல்லியமான அறிக்கை வெளியிடப்பட்டது.


Pengarang :