ECONOMYMEDIA STATEMENT

நண்பனைக் காப்பாற்றி விட்டு வாலிபர் நீரில் மூழ்கி வீர மரணம்

கோலாலம்பூர், அக் 15 – இங்கு அருகே உள்ள செரெண்டா நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற வாலிபர் தனது நண்பனை காப்பாற்றிய பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பிற்பகல் 2.55 மணியளவில் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் தீயணைப்பு படையினரும் மீட்புப் படையினர் ஆழமாக மூழ்கி அவரது உடலை மீட்க 19 வயதான கே. ராஜேஷ்வரன் நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் நண்பரிடமிருந்து மதியம் 1.20 மணி அளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததை அடுத்து கோலா குபு பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஐந்து பணியாளர்கள் 40 நிமிடங்கள் கழித்து அந்த இடத்துக்கு விரைந்தனர் என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறினார்.

இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்களும் இங்கு அருகிலுள்ள பெஸ்தாரி ஜெயாவைச் சேர்ந்தவர்கள், அவர்களில் ஒருவர் நீர்வீழ்ச்சியில் சிக்கி கொண்டார்.

“பாதிக்கப்பட்டவர் பின்னர் தனது நண்பரை காப்பாற்ற முயன்றார், அதில் வெற்றி பெற்றார், ஆனால் அவர் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் மூழ்கியபோது விதி அவரது பக்கம் இல்லை” என்று இன்று பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது நோரஸாம் கூறினார்.

சம்பவத்தின் போது, கனமழையை தொடர்ந்து பலத்த நீரோட்டம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.


Pengarang :