ECONOMYMEDIA STATEMENT

தீபாவளியன்று கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் கைதிகளை காண அனுமதி

கோலாலம்பூர், அக்டோபர் 21 – இந்த திங்கட்கிழமை வரும் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி, அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சிறைக் கைதிகள், குறிப்பாக இந்துக்கள், குடும்ப உறுப்பினர்களின் வருகையை அனுமதிக்கிறது.

புனர்வாழ்வு மையங்கள், சிறப்பு தடுப்பு மையங்கள் மற்றும் ஹென்றி கர்னி பள்ளி உட்பட சிறைத்துறையின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் வருகைக்கான தேதிகள் பொருந்தும் என்று சிறைச்சாலைகள் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கைதிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்களை நேருக்கு நேர் சிந்திப்பதைத் தவிர, அக்டோபர் 29 முதல் 31 வரை ஆன்லைனில் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அது கூறியது.

இருப்பினும், குடும்ப உறுப்பினர்கள் நேருக்கு நேர் சந்திக்க விரும்புபவர்கள், RT-PCR அல்லது ARTK-Ag பரிசோதனையை மேற்கொள்வது மற்றும் சிறைச்சாலைகளுக்கு வரும்போது கோவிட் -19 அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

நேருக்கு நேர் சந்திக்கும் நேரம் காலை 8.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை, சிறைக் கைதிகள் ஒரே ஒரு குடும்ப வருகையைப் பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சிறைச்சாலையானது, குடும்ப உறுப்பினர் முன்பதிவு செய்யப்பட்ட பிறகு தேதி மற்றும் சந்திப்பு அமர்வை நிர்ணயம் செய்யும். மேலும் மின்னஞ்சல் அல்லது தொடர்புடைய நிறுவனத்தை அழைத்தல் அல்லது www.prison.gov.my என்ற இணையதளத்தில் உள்ள i-Visit அமைப்பு மூலம் முன்பதிவு செய்யலாம்.

மேலும் விவரம் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை www.prison.gov.my என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :