ஈப்போ, 27 அக்: நேற்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து குகையின் வெளியேறும் பகுதியில் வெள்ள நீரோட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து, அங்கு அருகே உள்ள கோபேங்கில் உள்ள தெம்புருங் குகைக்குப் பின்னால் சிக்கியிருந்த 30 சர்வதேச படக்குழுவினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அப்பகுதியில் படப்பிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மொத்தக் குழுவினர் 80 பேர் என்றும், உள்ளூர் மற்றும் சிங்கப்பூரர்களை உள்ளடக்கிய 30 பேர் சிக்கியுள்ளனர் என்றும் பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.
சிக்கிய அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களைக் கொண்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவால் (SAR) வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.
“பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை,” என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
உயரும் நீர்மட்டம் காரணமாக தெம்புருங் குகையின் பின்பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்கள் குறித்து கம்பார் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு மாலை 4.10 மணிக்கு தகவல் கிடைத்ததாக முகமது யூஸ்ரி கூறினார்.
“கோபெங் மற்றும் கோத்தா பாரு காவல் நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று உள்ளது. மாலை 4 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் போது இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணை முடிவுகள் தெரிவிக்கின்றன. குகையில் உள்ள நீர் வாய்க்கால் பகுதிக்கு திடீரென தண்ணீர் வந்ததால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
“தண்ணீரின் ஆழம் தோராயமாக 1.5 மீட்டர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் படத்தில் பணிபுரியும் சிங்கப்பூரைச் சேர்ந்த சர்வதேச நிறுவனத்தைச் சேர்ந்த ‘பர்ஸ்டிங் பாயின்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு குழுவினர் தான்.