ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பெரும்பாலான வேட்பு மனு தாக்கல் மையங்களில் மழை பெய்யும்

கோலாலம்பூர், நவ 5- பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தினமான இன்று பெரும்பாலான வேட்பு மனு மையங்களில் காலை வானிலை லேசான மழை அல்லது மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளந்தான் மாநிலத்தின் கோல கிராய், மாச்சாங், கெதேரே பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ஜெராண்டூட்,  நெகிரி செம்பிலானில் கோல பிலா, சிரம்பான்,  ஜோகூரில் மாநிலத்தில் ஜோகூர் பாரு, ஆயர் ஹீத்தாம், மெர்சிங் மற்றும் கோலாலம்பூரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

கெமாமான், கோத்தா திங்கி, தம்புன், ஆகிய பகுதிகளில் நேற்றிரவு தொடங்கி தொடர்ந்து  மழை பெய்து கொண்டிருக்கிறது.

இதனிடையே, வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு தேர்தல் ஆணைய பணியாளர்களும் பாதுகாப்பு படை உறுப்பினர்களும் இன்று அதிகாலை 6.30 மணியளவில் ஒன்று கூடியதோடு அவர்களுக்கு வேட்பு மனுத் தாக்கலுக்கான நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


Pengarang :