ஷா ஆலம், நவ 5- சிலாங்கூர் மாநிலத்தின் அம்பாங் தொகுதியில் ஜூரைடா கமாருடினை எதிர்த்து எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் மூவர் சுயேச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஜூரைடா பி.பி.எம். கட்சி சார்பில் போட்டியிடும் வேளையில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் சிலாங்கூர் மாநிலத்தின் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோட்சியா இஸ்மாயில் கடுமையான போட்டியை கொடுப்பார் கன்று எதிர்பார்க்கப் படுகிறது.
பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் சுசாலினா அப்துல் லத்திப், தேசிய முன்னணி சார்பில் இவோன் லோ யீ வேன், பெஜூவாங் கட்சி சார்பில் நுருள் அஸ்கின் மாஹ்பி ஆகியோர் மற்ற வேட்பாளர்கள் ஆகும்.