ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

6 முனை போட்டி என்றாலும் பி.எச்சின் வெற்றி உறுதி  பன்னீர்செல்வம் திட்டவட்டம்

பந்திங்.நவ. 7-  கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியை நாம் தற்காத்துக் கொள்ள இரவு பகல் பாராமல் வாக்களிக்கும் நாள் வரையில் கடுமையாகப் பாடுபட்டால் வெற்றி நமதே என்று கோல லங்காட் தொகுதியின் பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவர் பன்னீர்செல்வம் கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலில் இரவு பகல் பாராமல் டாக்டர் சேவியர் வேலைச் செய்தார். நீண்ட காலமாகத் தேசிய முன்னணியின் கோட்டையாக இருந்த கோல லங்காட் நாடாளுமன்ற தொகுதியை  கடின உழைப்பால் பி.கே.ஆர் கோட்டையாக்கினார். இதே போல் நாங்களும் இரவு பகல் பார்க்காமல் உழைத்துக் கோல லங்காட் தொகுதியைப் பி.கே.ஆர் கோட்டையாக நிலை நிறுத்துவோம்.
இதற்காக நாங்கள் அனைவரும் ஒன்று இணைத்துத் தற்போது தேர்தல் களத்தில் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளோம் என்று கோல லங்காட் நகராண்மை கழக உறுப்பினருமான பன்னீர்செல்வம் கூறினார்.
இத்தொகுதியில் மலாய்க்காரர்கள் 58%, சீனர்கள் 21%, இந்தியர்கள் 17%, பூர்வீகக் குடியினர் 4%. மலாய்க்காரர்கள் பேராதரவை திரட்டப் பி.கே.ஆர் மற்றும் அமானாவும் களத்தில் இறங்கி இணைந்து செயல் பட்டு வருகின்றன. இதே போல் சீனர்களின் பேராதரவை திரட்டுவதில் ஜ.செ.க.வைச் சேர்ந்த பந்திங் சட்டமன்ற உறுப்பினர் லௌ இ சாங் தலைமையில் ஒரு மாபெரும் தேர்தல் இயந்திரமே செயல் பட்டு வருகிறது.
நமது வேட்பாளர் மணிவண்ணனும் தொகுதித் தலைவர் அரிதாசும் சட்டமன்ற உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
40 க்கும் மேற் பட்டத் தேர்தல் நடவடிக்கை அறை கோல லங்காட் தொகுதி முழுவதும் அமைக்கும் வேளையில் தீவிரமாக ஈடு பட்டுள்ளார் நமது தொகுதித் தலைவர் என்று அவர் மேலும் கூறினார்.
கோல லங்காட் பி.கே.ஆர் கட்சியின் கோட்டையாகக் கோல லங்காட் தொகுதியை நிலை நிறுத்த நம்பிக்கை கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இரவு பகல் பாராமல் உழைத்தால் இது சாத்தியம் என்று பன்னீர் திட்ட வட்டமாகக் கூறினார்.
செய்தி- சுப்பையா சுப்ரமணியம்

Pengarang :