ECONOMYMEDIA STATEMENT

அம்பாங், தாமான் ஹலாமானில் நிலச்சரிவு- பங்களா வீடு சேதம்

கோலாலம்பூர், நவ 15- அம்பாங், தாமான் ஹலாமானில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் பங்களா வீடு ஒன்று சேதமடைந்தது. இச்சம்பவத்தில் அந்த வீட்டிலிருந்த மூவர் தெய்வாதீனமாக உயிர்த் தப்பினர்.

இந்த நிலச்சரிவு தொடர்பில் இன்று விடியற்காலை 2.30 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்த தாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.

ஏழு பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவம் இடத்திற்கு விரைந்ததாக கூறிய அவர், ஐந்து மாடி கொண்டி பங்களா வீட்டின் பின்புறம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அவர்கள் கண்டதாக தெரிவித்தார்.

வீட்டின் அருகிலுள்ள  மலைச்சரிவிலிருந்து கற்களும் மண்ணும் சரிந்து விழுந்து வீட்டின் முதல் மாடியிலுள்ள சமையலறை மற்றும் இரண்டாவது மாடியிலுள்ள படுக்கை அறையை சேதப்படுத்தியிருந்தன என்று அவர் சொன்னார்.

அந்த வீட்டிலுள்ள  அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதை உறுதி செய்ய வீட்டை முழுமையாகச் சோதனையிட்டோம். அப்பகுதியில் மண் நகர்வை தீயணைப்பு வீரர்கள் சோதனையிட்டதோடு தடுப்புகளையும் ஏற்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார்.


Pengarang :