ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வெள்ளத்தில் சிக்கியுள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த பாதுகாப்பான இடத்தை எம்பிஎஸ்ஜே வழங்குகிறது

ஷா ஆலம், நவ 18: சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) பேரிடர் ஏற்படும் போது குடியிருப்பாளர்கள் பயன்படுத்த தற்காலிகமாக வாகனத்தை இடமாற்றம் செய்யும் பகுதியை வழங்குகிறது.

வெள்ளம் அல்லது நிலச்சரிவுகளில் பாதிக்கப்படுபவர்கள் அவர்களின் குடியிருப்புக்கு  அருகில் வாகனங்கள் நிறுத்தி வைக்க ஏற்ற எளிதான வகையில், ஐந்து மண்டலங்களாகப் பிடித்துள்ளது என்று எம்பிஎஸ்ஜே ஒரு அறிக்கையில் தெரிவித்தது. அவை, சுபாங் ஜெயா, கோத்தா கெமுனிங், ஸ்ரீ செர்டாங், ஸ்ரீ கெம்பாங்கன் மற்றும் கின்ராரா ஆகியவை சம்பந்தப்பட்ட மண்டலங்கள்.

“பேரிடர்களின் போது ஏற்படும் சொத்து சேதங்களை தவிர்க்கவும் குறைக்கவும் இந்த முயற்சி செயல்படுத்தப்படும்” என்று அவர் இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திங்கள் முதல் வெள்ளி வரை (காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை) எம்பிஎஸ்ஜே கட்டுப்பாட்டு மையத்தை 03-8024 7700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் கூடுதல் தகவல்களை பெறலாம்.

சிலாங்கூர் தென்மேற்கு பருவமழையிலிருந்து வடகிழக்கு பருவமழைக்கு மாற்றத்தை அனுபவிக்கும் என்றும், இம் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் வரை 100 முதல் 400 மில்லி மீட்டர் (மிமீ) வரை மழை பெய்யும் என்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.


Pengarang :