ECONOMYMEDIA STATEMENT

தெரு விளக்கை பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கியது- இருவர் பலி

பாப்பார், நவ 18- இங்குள்ள புக்கிட் மெலின்சங் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று காலை தெரு விளக்குகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு குத்தகைப் பணியாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் தங்களுக்கு இன்று காலை 8.25 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும் பாப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் தொடர்பு கூறினார்.

இந்த சம்பவத்தில் மூன்று பணியாளர்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. ஒருவர் உயிர் பிழைத்த வேளையில் மற்ற இருவரும் இறந்துவிட்டது சுகாதார அமைச்சக அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.

சபா மின் விநியோக நிறுவனம் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களை அப்புறப்படுத்தினர். இந்த நடவடிக்கை காலை 9.51 மணிக்கு முடிவுக்கு வந்தது என்றார் அவர்.

உயிரிழந்த இருவர் அப்துல் ரவுஃப் மண்டா (வயது 61), மற்றும் அஸ்னான் அப் வாஹிட்  (வயது 54), என அடையாளம் காணப்பட்டதாக கூறிய அவர், உயிர்ப் பிழைத்தவர் அல்பிராயன் பிங்கா (வயது 27) என்றார்.


Pengarang :